இசை காதலி

உயிரில் வரும் ராகமே - தினம்
உன்னால் உருவாகுதே
உணர்வு போடும் தாளமே - மனம்
இரண்டில் ஒன்றாய் ஆகுதே..!

சரணம்-1
அன்பை கூட்டி பார்க்கிறேன்
ஆயுள் தேதி கூடுதே
ஆசை சுமந்து போகிறேன்
இன்ப சாலை நீளுதே
உயிரின் சாவி திறக்கும் போது
கண்ணில் காதல் தெரியுதே
உருவங்கள் பல உண்டு
உன் போல் ஏதுமில்லை
அன்பின் ஆழம் கண்டு
அளக்க காதல் கோலுண்டு
வாழ் நாளில் வசந்தம் சேரும்
ஒரு நாளும் எனக்குப் போதும்
நாரில் பூவாய் வாழவே..!

சரணம்- 2

மனிதம் விட்டு வளர்க்கிறேன்
புனிதப் பட்டு வாழுதே
உதவிப் பூக்கள் சூட்டினேன்
கை தந்து தெய்வம் வாழ்த்துதே
காதல் தேனீ கூட்டிலே
வாழும் நொடி போதுமே
வாசல் திறந்த உயிரிலே
பாசம் நிறைந்து பாடுதே
நீயும் நானும் வாழவே
இந்த பூமி சொர்க்கம் ஆனதே..!

சரணம் - 3

இயற்கை காற்றில் இணைத்தது
இசையில் கவலை தீர்ந்தது
ராகம் எங்கே எழுந்தது
உயிரில் கலந்தே பிறந்தது
திசையும் உன்னால் பிறந்தது
இசையும் அங்கு கலந்தது
காற்று கூட கடவுள் போல
இசையைப் படைக்கும் அற்புதம்
அசைய சொல்லி ஆட்டுவிக்கும்
உயிரே உன்னில் அற்புதம்
எழுக நீயும் என்னிடம்
தொழுவேன் உன்னை நித்தினம்..!

எழுதியவர் : செ.பா.சிவராசன் (15-Jun-18, 12:28 pm)
Tanglish : isai kathali
பார்வை : 224

மேலே