மனதில் உறுதி வேண்டும்
கண்ணாடி மனம்
உடைந்தாலும் தினம்
மறவாமல் எழும்
வீழ்ந்தாலும் கதிர்
அது எழ மறுத்தால்
எப்போதும் இருள்
சூழ்ந்திங்கு இருக்கும்
வாழ்வில்
விடியல் காண வேண்டுமென்றால்
முட்டி மோதி
முளைத்து எழும்
வித்து மிக்க
விதையைப் போலே
முயன்றால் நீயும்
எழலாம் மேலே...!
மலையா? மடுவா?
எது இங்கு பெருசு?
மனம் மட்டும் இருந்தால்
இவ்வுலகம் சிறுசு
அகக்கண் விழித்துப்பாரு
ஒவ்வொரு நொடியும் புதுசு
முடியாதென்பது
முயலாதவர் மனசு!
எண்ணம் எழுத்து
தன்னம்பிக்கை தணல்
கிச்சாபாரதி