நீயன்றி நான் வேறில்லையே என்னவளே

' உந்தன் உயிர் நான்' என்றாய் என்னவளே
நீ அறியாயோ அந்த உயிர்த்தீயின்
'சுடரல்லவோ' நீ என்னுள் ஒளிரும் ஜோதி......
எந்தன் இதயத்தில் நீ.....
அதன் 'துடிப்பு'; எந்தன் சிந்தையிலும்
நீயடி என்னவளே , 'சித்தம்' நீயே ............
நீதான் எந்தன் பார்வையடி பாவையே,
எந்தன் இருவிழிகளின் பார்வை நீ
நீயே எனக்கு எல்லாம் இனியவளே
நீயன்றி நான் வேறிலையே.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (18-Jun-18, 9:28 am)
பார்வை : 166

மேலே