காதல்-காமம்
காமம்தான் காதல் என்று
நினைத்து காமக் கடலில்
மிதந்துவந்தேன் கரை தெரியாது
திணறி மூழ்கிவிட்டேன்...அக்கடலில்,
காதல் கரைக் காணாது
வெல்லப்பாகில் மாட்டிய ஈபோல்.