நிகரில்லா நிலமகளே
உன்னழகை எடுத்துக்கூற
--உறங்காது யோசித்தேன்
கல்கியின் நாவல்களை
--கரைத்தும் குடித்தேன்
வரலாற்றுச் சுவடுகளை
--வரிசையாய் படித்தேன்
வார்த்தைகள் கிட்டாது
--வாயடைத்து நின்றேன் !
எழிலரசி இளவரசியே
--ஏழிசை இன்னிசையே
செதுக்கிய அழகுசிற்பமே
--செங்கதிர் ஒளிக்கீற்றே
ஓவியனின் கற்பனையே
--ஒப்பில்லா கலையரசியே
நிகரில்லா நிலமகளே
-- நினைவில் நிலைத்தவளே !
பழனி குமார்