நீ இல்லாமல்
எதன் தொடக்கத்தில்
நீ எனக்கு
கிடைத்தாயோ என்று
தெரியவில்லை
எதன் முடிவில்
நீ எனக்கு
கிடைத்தாயோ என்றும்
தெரியவில்லை
ஆனால் ஒன்று
மட்டும்
ஆணித்தனமாக
தெரிகிறது
நீ இல்லாமல்
எனக்கு எந்த ஒரு
தொடக்கமும்
இல்லை
எந்த ஒரு
முடிவும்
இல்லை....!!