பிரதிபலிப்பு

பிரதிபலிப்பு

பால் நிலவு
உலவும் நேரம்

சலனமின்றி, தண்ணீர்
அசைவுமின்றி
அமைதியான குளம்

அங்கும் இங்கும் அசையும்
மீன்கள் வட்டமாய்
தண்ணீருக்குள் வந்து விழுந்த
இரையை பிடிப்பதற்கு
விடியும் வரை
கவ்வி கவ்வி ஓய்ந்து
போய்

வட்ட வடிவ இரை
மெல்ல மெல்ல
நகர்ந்து

விடியலின் வெளிச்சம்
வந்த பின்னால்
மறைந்து போனது !

திகைத்து நின்றது
மீன்!

அதற்கு தெரியுமா?
சூரியன் உதயமாவதற்கு
முன்னால் நிலவு மறைந்து
விடும் என்று !

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (19-Jun-18, 12:05 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 93

மேலே