அமைதியைத் தேடி

--------------------------------
​வழிந்தோடும் வாகனங்கள்
ஓடும் சாலையின் குழிகளில்
உறைந்த நிலையில் குருதி ...
வீதிகளின் விளிம்பில்
நிறம் மாறிய மண்
விட்டுச் சென்ற காலணிகள் ...

கடித்துத் துப்பியது போல
வெடித்தத் தோட்டாக்களின்
சிதறிய துகள்கள் ...
பீதியில் கலங்கி நிற்கும்
காட்சியை கண்ட சாட்சிகளாக
கருகிய நிலை மரங்கள் ...

அனைத்தும் முடிந்து இன்று
அதிர்ச்சி நீங்கா முகமுடன்
நடைப்பிணமாக நபர்கள் ...
பலி கொடுத்த வீடுகளில்
அடக்க முடியா அழுகையின்
அலறல் சத்தம் ...

இத்தனைக்கும் இடையில்
நடந்து செல்கிறேன் நான்
மரணித்த மனிதத்தைத் தேடி ...
.
கடலோரக் காற்றால்
கலைந்த கேசமுடன்
அலைகிறேன் நேசம் நாடி
தொலைந்த அமைதியைத் தேடி ..


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (19-Jun-18, 4:15 pm)
Tanglish : amaithiyath thedi
பார்வை : 474

மேலே