அல்ஆரும் எண்ணிலா வான்மீன் வானகத்தோர் வெண்ணிலா ஆகுமோ - நீதி வெண்பா 98

நேரிசை வெண்பா

கல்லார் பலர்கூடிக் காதலித்து வாழினும்நூல்
வல்லான் ஒருவனையே மானுவரோ - அல்ஆரும்
எண்ணிலா வான்மீன் இலகிடினும் வானகத்தோர்
வெண்ணிலா ஆகுமோ விளம்பு. 98 நீதி வெண்பா

பொருளுரை:

படிப்பறிவில்லாத மூடர் பலர் கூடி ஒருவரை யொருவர் விரும்பி வாழ்ந்தாலும் கல்வியில் வல்ல ஒருவனையே ஒப்பாவரோ?

ஆகாயத்தில் இரவில் ஒளிவீசும் அளவில்லாத நட்சத்திரங்கள் விளங்கினாலும் ஒரு வெண்மையான சந்திரனுக்கு ஒப்பாகுமா என்று சொல்.

கருத்து:

மூடர் பலர் கூடினாலும் கல்வியில் வல்ல ஒருவனுக்கு ஒப்பாக மட்டார்கள்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Jun-18, 11:39 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 67

மேலே