என் இதயம்

எங்கிருந்தோ வந்தாள்
ஒரேயொரு பார்வையால்
என்மனதை திருடிவிட்டாள்
போனவள் இன்னும் திரும்பவில்லையே
வானிலிருந்து நீ பார்த்தாயா நிலவே
என்னவள் போன இடம் நீ அறிவாயோ
தேடி நீ சேதி சொல்லுவாயா நிலவே
நாளை வரைக் காத்திருப்பேன் நான்
ஆற்றங்கரை மணலில் உனக்காக
அவள் வந்து என்னை பார்க்க மறுத்தால்
என் இதயத்தை மீட்டு வந்துவிடு நிலவே
என்னைக் காண மறுத்தால் எதற்கு
நிலவே அவளுக்கு என் இதயம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (20-Jun-18, 5:40 pm)
Tanglish : en ithayam
பார்வை : 390

மேலே