கண்களால் பேசினாள்
அவள் கண்ணசைவில் பாடம் கற்றேன்...
விரிந்த விழிகளில் கோபத்தை காட்டினாள்...
ஓரக்கண்ணால் கட்டளை இட்டாள்...
விழியினை கீழிறக்கி சோகம் காட்டினாள்...
சுருங்கின கண்களால் கொஞ்சிப் பேசினாள்...
காதலைக் காணும்போது அந்த கண்களால் மயங்கிப் போனேன்...