காமதேவ உணர்வுகள்

செவ்வான வீதிகளில் பிறையின் வருகையுணர்ந்த ஞாயிறு,

திங்களின் பேரழகைக்
காணா ஏமாற்றத்துடன்
காற்றின் பதியோடு கிழக்கே
மறையும் மாயவேளை,

வயல்வெளிகளின் நடுவே
சலசலவென இதமான ஓசையில்,
இசையை கவ்விக்கொண்டு
ஓடும் ஓடைநீர்,

படைகுருவிகளும் செக்கர்
அழகைக்கண்டு கூட்டைத் தேடியோட,

சோதியில்லா வயலோடையின் அழகை மிளிரச் செய்ய மின்மினிப் பூச்சிகளும் பறக்க,

ஓடையின் வலப்புறம்
பச்சைப் பசேலென்று அனவரதமும் சிணுங்கும் நெற்பயிர்களின் ஆடலிசை,

செவிகளில் உணர்ந்தும்
உணராமலும் ஊடலில்
மந்தாரைப் பூவின்
மடியினில் என்சிரம்,

நிலவின் வெள்ளொளியில்
மயங்காத மனம்,
அவளிட்ட மொத்தத்தின்
சக்தியில் மயங்க,

கணுக்காலிகளும் மின்மினிக்களும்
தேடியோடி வரவே,
திறை செலுத்த வேண்டி ஏங்கிய இதழ்களில்,

விரல்வைத்து விடை கொடுத்தால் காமதேவ உணர்வுகளுக்கு.

பூவிதழாக,
தமிழினியன்

எழுதியவர் : தமிழினியன் (22-Jun-18, 10:22 pm)
பார்வை : 63

மேலே