வள்ளி கொடி

தனக்குத்தானே
நாள்தோறும்
குளியலறையில்
குடமுழுக்க
செய்துகொள்ளும்
தங்கச்சிலை நீ......!

உனதழகின்
மயக்கத்தில் தான்
உலகம் சுற்றுகிறதோ

உனது அசைவின்
மயக்கத்தில் தான்
ஆண்டவனும்,
கற்சிலையாகி
கடவுளாய் நிற்கிறான்
ஆலயம் முழுவதும்
தெய்வங்களாய் .....!

உன்னை செதுக்கிய
உன் தந்தையே
உலகின் தலைசிறந்த
சிற்பி.........!

எந்த உளியை கொண்டு
எந்த கலையை கொண்டு
செயது இருப்பானோ .......!!!!!

எழுத்துக்களும்
ஓசைகளும் இன்றி
வெட்ட வெளியில்
உன் தாயால்
தீட்டப்பட்ட
வள்ளிக்கொடி கவிதை நீ.......!


எப்படி வரைந்து இருப்பார்கள் என்று
எல்லோரா ஒவியங்களும்
எண்ணி எண்ணி பார்க்கும்
என்னை போல உன்னை பார்த்து விட்டால்......!

உன்னை கண்ட மயக்கத்தில் தான் புவி
தன்னை மறந்து
தன்னை தானே
சுற்றிக் கொண்டு திரிகிறது........!

கதிரவன் உன்னை காண ஒவ்வொரு
நாளும் 12 மணி நேரம் தவமிருப்பதையே
உலகம் இருள் என்று கூறுகிறது.......!

கதிரவனுக்கும்
வெளிச்சம் கொடுக்கும்
கட்டழகி நீ என்று
நிலவு என்னிடம் கவிதை சொல்கிறது.....!!

வளர்பிறையும் தேய்பிறையும்
இல்லாத நிலவு நீ மட்டும்தான்........!

உனது நெற்றியில்
பொட்டாய்
ஒட்டி கொள்வேண்டும்
என்பது நிலவின் நீண்ட நாள் ஆசையாம்......!

உன் வீட்டு நிலை கண்ணாடி
உன்னை கண்ட பின்பும்
நிலைதடுமாறி விழாமல் இருப்பது உலகறியாத
அதிசயம் என்று உனக்கு ஏன் புரிவதில்லை.....!!!!

மொட்டு்களெல்லாம் உன் முகம்
பார்த்து பூக்க வேண்டும் என்று
காற்றுடன் பினக்கு போட்டு
கொண்டு பூக்காமலிருக்கிறது...!!


உன் பாதங்களில் முத்தமிட
பூமி பந்து நாளெல்லாம்
போராட்டம் செய்கிறது
நீ காலனியை கொஞ்சம் கழட்ட வேண்டும் என்று...!!

வாரமெல்லம் வெள்ளி கிழமை
வருவதே வள்ளி கொடி உனக்காகவே......!

வள்ளி கொடி கோலமிட
உன் வீட்டு வாசல்
ஒவ்வொரு நாளும் காத்து கிடக்கிறது.....!!!!

நீ ஊதி அனைத்து விட்டாய்
என்று உன் வீட்டு சிமிழ்விளக்கு
இருட்டறையில் இரவெல்லாம்
அழுது கொண்டு கிடக்கிறது....!!!

நீ உடுத்தாத புத்தாடைகள்
எல்லாம் பூட்ட பட்ட
பெட்டிக்குள் போரிட்டு
கொண்டு இருப்பது
உனக்கு ஏன் புரியவதில்லை.....!!!

நீ பூவைபறிக்கும் கொலைகாரி
என்று உன் வீட்டு
தோட்டம் திட்டுகிறது....!!

நீ நேற்று உடுத்திய ஆடைகள்
இன்று நீ அனாதையாக்கி விட்டாய்
என்று அழுது புலம்பல் கொள்கிறது
நீ அறிவாயா...!!

வள்ளி கொடி
வெள்ளி கோளை
நீ புள்ளியாக வைத்து
கோலமிட வேண்டும் என்று
வான் விருப்பம் தெரிவித்துள்ளது
நிறைவேற்றுவாயா...!

உனது செவ்வாயில்
தேன் இருக்கிறதென்று
நீ கொப்பளித்து துப்பிய நீரில்
துள்ளி குதித்து விளையாடும்
உன் வீட்டு சித்தெரும்புகளின்
கண்டுபிடிப்பு.....!

கனிகளுக்கெல்லாம்
உன்னை கடித்து தின்ன ஆசையாம்....!!

காற்றுக்கு உன்னை
சுவாசிக்க பேராசையாம்...!!

நீருக்கும் உனக்குள்
நீந்திவிட ஆசையாம்....!!!

ஆற்றுக்கு உன்னோடு
அலைந்து விட ஆசையாம்...!!

சேற்றுக்கு உன்னோடு
சேர்ந்துவிட ஆசையாம்...!!

உன் வீட்டு தாழ்வாரம்
உன்னை முத்தமிட
வரும்போது நீ
தலைசாய்ந்து கொண்டு
தவிர்த்து விடுவதேன்
என்று புரியாது
நாளெல்லாம் தவிவக்கிறது...!

காற்றுக்கும்
நீ உடுத்தியிருக்கும்
தாவனிக்கும் இடையே ஒரே போராட்டம்
உன் இடையை யார் ஆக்கிரமிப்பு செய்வதென்று...!!!

நீ குடித்த நீரில்
ஒரு துளி சிந்தி
உதடு, கண்ணம்
மார்களின் வாழியே
உருண்டேடி
தொப்புல் குழியில்
துள்ளி குதித்து
மகிழ்ந்து உன்னில்
உன்னால்
குளிக்கிறது
கும்மாளம் அடிக்கிறதை நீயே பார் ....!


நீ உணவருந்தும் பொது
உன் உதடுபட்டு
தவறி விழும்
ஒரு துளி சோற்று பருக்கைக்காக
ஈ, எறும்புகள் காத்து கிடக்கிறது.....!!

நீ காலையில் உதயமாவதை
காண கதிரவன் வருகிறது
அதையே காலை என்கிறோம் ...!!!!

நீ மாலையில் மறைவதை
காண நிலவு வருகிறது
அதையே மாலை என்கிறோம் .....!!

நீ இமைமூடி துயில்
கொள்வதையே இரவு என்கிறோம்....!!!

வானுக்கு வெள்ளியும்
மன்னுக்கு வள்ளி கொடியும்
வரம் என்று தோன்றுகிறது......!!

வணக்கம்

எழுதியவர் : (23-Jun-18, 1:26 pm)
பார்வை : 285

மேலே