ஆராதிக்கும்

பரமன் படைத்த பூமகள்
பருவத்தில் பூத்திருக்கும்
பாவையவள்
துணை தேடி கயல்விழியை
தூது விட்டாள்
துள்ளிக் குதித்த கயலோ
அள்ளிக் கொண்டது
ஆணின் உள்ளத்தை

அழகு இதழ்களை
ஆடவைத்து
நாட்டிய புன்னகையை
பாட்டின்றி மேடையேற்றி
அரங்கேற்றியதால்
அகம் தொடும் காதல்
ஆமோதிக்கும்—மெளனம்
ஆராதிக்கும்

எழுதியவர் : கோ. கணபதி. (24-Jun-18, 8:09 am)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 28

மேலே