காதல் கெழுத்தீ

மாரி கால மழை பொய்த்துக்
காய்ந்து சிதிலமான
குள மடியில்
சோனாவாரி பெய்து
நீர் நிறைவது கண்டு
ஆனந்தப் பட்டு ஆசையில்
குதித்து விளையாடும்
குறவை மீன் போலே,
பூவையர் வனத்தின்
அந்த ஒற்றை வசீகரக்
கொடி மரத்தில் கனிந்த
உன் ரஸ்தாளித் தலைப்பழ
முகம் கண்டதும்,
என்நீர்த்தடாக நெஞ்ச எல்லையில்
உடனே உள் நுளைந்து
உன் மீது மையல் கொண்டு
உரசி நீந்திக் கழிக்கிறது
எனது காதல் கெழுத்தீ....

அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (24-Jun-18, 6:24 pm)
பார்வை : 93

மேலே