புத்தகங்கள்
மனக்கவலை போக்கி நல்ல எண்ணங்களை
மனதில் பதிய வைக்கும் - நம்
மனதை செம்மை செய்யும் - புத்தகங்கள்
ஏட்டில் வடித்த எழுத்துக்கள் வழியே
ஏற்றம் கொள்ள வைக்கும் - வெற்றியை
என்றும் கிடைக்க வழிசெய்யும்
தனியே இருந்தால் துணையாய் வந்து
தனிமையை ரசிக்க வைக்கும் - வாழ்வின்
தரத்தை மேலும் உயர்த்தும் - தன்
உயர் கருத்தை ஆழ பதித்து
உள்ள அழுக்கை போக்கும் - நம்மை
உலகில் உயர வைக்கும்
வண்ண காவியங்களை எண்ண அலைகளை
கண்களின் முன்னே காட்டும் - உயர்
எண்ணங்களை தோன்ற வைக்கும் - அறிவு
புதையலை தன் உள்ளே கொண்டு
புதிய கேள்விகளை கொடுக்கும் - நல்ல
பதிலையும் அள்ளிக் கொடுக்கும்
ஆக்கம்: வேல்பாண்டியன் கோபால்