நீ எனது இன்னுயிர் கண்ணம்மா

மனதை மயக்கும் உந்தன் மேனியை
பொன்னழகு மேனி என்றேன் - மின்னும்
மாணிக்க சிலை என்றேன் - அன்பே
காதல் மயக்கம் கொண்டே நானும்
மனதில் உன்னை வைத்தேன் - தினம்
பார்த்து பார்த்து ரசித்தேன்

ஆசை தூண்டும் தோற்றம் கண்டு
அழகு கவிதை வடித்தேன் - அதை
நாளும் நானும் படித்தேன் - எந்தன்
நெஞ்சில் பொங்கிடும் ஆசைகள் யாவும்
நினைவில் என்றும் இருக்குமே - அது
என்னை மகிழ வைக்குமே

பகலும் இரவும் எந்தன் நெஞ்சில்
பாவை உந்தன் நினைவே - கண்
பார்க்கும் இடமெல்லாம் உன்முகமே - நான்
உன்மீது கொண்ட காதல் என்றும்
மெய்யே மெய்யே அன்பே - நீ
எனது இன்னுயிர் அன்பே

ஆக்கம்: வேல்பாண்டியன் கோபால்

எழுதியவர் : வேல்பாண்டியன் கோபால் (24-Jun-18, 10:35 pm)
சேர்த்தது : வேல்பாண்டியன்
பார்வை : 174

மேலே