சென்னையில் இருந்து குற்றால சீசனை அனுபவிக்க சிறப்பு சுற்றுலா

சென்னையில் இருந்து குற்றால சீசனை அனுபவிக்க சிறப்பு சுற்றுலா: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு...

குளு குளு குற்றாலத்தை கண்டு களிக்கவும், அருவியில் குளித்து மகிழவும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சென்னையில் இருந்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமையிலிருந்து இரண்டு நாட்கள் குற்றாலத்திற்கு சிறப்பு சுற்றுலா ஏற்பாடு செய்துள்ளது.

இச்சுற்றுலா ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை 4.30 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு திங்கட்கிழமை காலை 6.00 மணிக்கு மீண்டும் சென்னை வந்தடையும். இரண்டு நாட்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இச்சுற்றுலாவில் தென்காசியில் இரவு தங்குவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.

சொகுசு பேருந்து வசதி, தங்கும் விடுதி, 6 வேளை சைவ உணவு, சுற்றுலா ஸ்தல நுழைவுக் கட்டணம் மற்றும் வழிகாட்டி கட்டணம் மேலும் ஞாயிற்றுக்கிழமை காலை குற்றால சுற்றுலா முடிந்தவுடன் சென்னை திரும்பும் வழியில் தென்காசி (விஸ்வநாதர் கோயில்), ஸ்ரீ வில்லிப்புத்தூர் (ஆண்டாள் கோயில்) மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில்களுக்கும் அழைத்துச் செல்லப்படும்.

மேலும் விவரங்களுக்கு ‘மேலாளர் (சுற்றுலா), தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், 2, வாலாஜா சாலை, சென்னை– 2’ என்ற முகவரியில் அல்லது 25384444, 25383333, 25389857 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளும்படி சுற்றுலாக் கழகம் செய்தி வெளியிட்டுள்ளது.

வேலாயுதம் ஆவுடையப்பன்
09444286812

248 சிந்தாமத்தார் பள்ளிவாசல் தெரு
கடையநல்லூர் 627751

எழுதியவர் : (25-Jun-18, 5:59 am)
பார்வை : 69

மேலே