அவள் அவனுக்கு எழுதிய காதல் மடல்

உன் ஒரே பார்வையால்
என்னைத்துளைத்து என்
என்னுயிருக்குள் புகுந்துவிட்டாய்
உயிருக்கு உயிராய்
மூன்றெழுத்து காதல்
மந்திரமாய் இனி
நீதான் என் அன்பே
என் உள்ளம் உயிரெல்லாம்
நீயன்றி நான் இனி
வாழ்ந்திடமுடியாது
வேரின்றி மரம் வாழ்ந்திடுமோ
அது போல

எழுதியவர் : வாசவன்=தமிழ்பித்தன்=வாசு (25-Jun-18, 7:53 am)
பார்வை : 210

மேலே