தேய்ந்து மறையும் நினைவு

கண் முன் இல்லாத எதுவும்

கருத்தில் பதிவதில்லை

இருக்கும் யாவும்

உள்ளது போல் நினைவுக் கொள்ளப்படுவதில்லை

நிகழ்வொன்று

சிந்தனை நூறு

திரிந்துப் பெருகிப் பல்கி நிற்கும்

எண்ணங்களடர்ந்த நினைவடுக்குகளின் நெரிசலில்

மூச்சுக்காய்த் திணறுகிறது

உன்னைப் பற்றிய நினைவு

எழுதியவர் : பிரத்யுக்ஷா பிரஜோத் (27-Jun-18, 10:01 pm)
பார்வை : 47

மேலே