தேய்ந்து மறையும் நினைவு
கண் முன் இல்லாத எதுவும்
கருத்தில் பதிவதில்லை
இருக்கும் யாவும்
உள்ளது போல் நினைவுக் கொள்ளப்படுவதில்லை
நிகழ்வொன்று
சிந்தனை நூறு
திரிந்துப் பெருகிப் பல்கி நிற்கும்
எண்ணங்களடர்ந்த நினைவடுக்குகளின் நெரிசலில்
மூச்சுக்காய்த் திணறுகிறது
உன்னைப் பற்றிய நினைவு