பெண் பிறந்தாள்

பெண் பிறந்தாள்...

முணுமுணுப்பில் தொடங்கிய வலி

அலறலாகிப் பிளிற தொடங்கினதும்

பரபரப்பின் உச்சத்தில் சுற்றத்தார்

வாகனம் வந்து யாத்திரை ஆரம்பமானது

தன்னால் வரப்போகும் ஜீவனுக்காக பிரார்த்தனையோடு பிரயாணம்

மருத்துவமனை நோக்கி ஆவல் தொடர்ந்தது

பிரசவ அறையில் அடைக்கலம் கிடைத்தது

இன்னும் சிறிதுநேரம் பொறுக்க மனம் மறுத்தது

சுகப்பிரசவம் என அறிவிப்பு வந்தது

முறுமுறுத்த நாவுகள் எல்லாம் கடவுளை வேண்டியது

திடீரென கதறல் அதிகரிக்க பதட்டம் தொற்றியது

கதறலை மேற்கொண்டு தனித்துவமான அழுகையின் சத்தம் கேட்டது

அவ்வழுகையை கேட்டோர் கண்கள் ஆனந்த கண்ணீரால் தாண்டவமாடின

இதுவரை பாலின விவாதம் செய்தவர்கள் பெண் பிறப்பாள் என்று சொன்ன தகப்பனை பொறாமையோடு பார்த்தனர்

ஆம், ஒரு பெண் தேவதை இவ்வுலகில் உதித்து, அதற்கு காரணாமனவளுக்கு தாய் என்னும் பெருமையை கொடுத்தாள்...

எழுதியவர் : ஜான் (29-Jun-18, 9:42 am)
பார்வை : 585

மேலே