என்றும் ஓயாத நினைவலைகள் என்னில் 555

என்னவளே...

தென்றலில் தென்னை
ஓலை சலசலக்க...

நாணல் எல்லாம்
தலையசைக்க...

ஓடும் ஆற்றுநீரில் நீ பாதம்
நனைத்து ரசித்துக்கொண்டு இருந்தாய்...

உன்னருகில்
நான் வந்தேன்...

உன் கண்களை நோக்கி
என் காதலை சொன்னேன்...

மறுப்பேதும் சொல்லாமல்
புன்னகை பூத்தாய்...

இன்று ஓடிய ஆற்று
நீரும் வற்றிப்போனது...

உன் காதலை போல...

தலையசைக்கும் நாணல்
இன்னும் தலையசைத்து கொண்டே...

என் காதலைப்போல...

தென்னை ஓலையும்
காய்ந்துவிடும் ஓர்நாள்...

உன் நினைவோ என்றும்
ஓயப்போவதில்லை என்னில்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (2-Jul-18, 8:24 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 452

மேலே