அவள் வருவாளா

காதல் என்னும் போர்வைக்குள்,
கன்னியவளை கனவில் தேடுகிறான்,
காத்திருப்பு எல்லாம் கரைவதற்குள்,
கவிதைக்கு உயிர்சேர்க்க அவள் வருவாளா???

அவள் விழுந்த விழிகளுக்குள்,
அணுவளவும் உறக்கமின்றி தவிக்கிறான்,
அந்நியமாய் விரும்பியவள் கடப்பதற்குள்,
அவனுள்ளே அடங்கிப்போக அவள் வருவாளா???

வலிகள் சொல்லும் கண்ணீருக்குள்,
வழியும்துளியில் அவளையே காண்கிறான்,
வழிகளை தேடியே தொலைவதற்குள்,
வழிதுணையாய் மறக்காமல் அவள் வருவாளா???

மாய்ந்துப் போன ஆசைகளுக்குள்,
மாயங்கள் நிகழ வேண்டுகிறான்,
மாலையோடு கல்லறை சேர்வதற்குள்,
மாங்கல்யம் ஏந்திட அவள் வருவாளா???

உயிர்துளி அத்தனையும் உரைவதற்குள்,
உறவானவளின் தடயத்தை யாசிக்குறான்,
உதிரமும் வற்றி போவதற்குள்,
உயிரளித்து உறவாடிட அவள் வருவாளா???

#கவிதை_கற்பனை_மட்டுமே
@ஸ்ரீதேவி

எழுதியவர் : ஸ்ரீதேவி (3-Jul-18, 6:58 pm)
சேர்த்தது : ஸ்ரீ தேவி
பார்வை : 734

மேலே