உன்னை வாழ்த்தி நான் வாழ்வேன் 555

உயிரே...

நெஞ்சுக்குள் துடிக்கும் என் இதயத்தின்
சுவாசமாய் இருந்தவள் நீ...

உன் நெஞ்சுக்குள் வந்து
செல்லும் காற்றை போல...

யாரோ சொல்லியதை நம்பி
என்னை விட்டு சென்றாய்...

என் இதயத்தின்
சுவாசமல்லவா நீ...

உன் சுவாசமின்றி வாழ்வேன்
ஓர் நடைப்பிணமாக...

என்றாவது நீ
உண்மையை உணரும் வேலை...

நான் இருப்பேன்
உன் நினைவுகளோடு...

நீ இருக்கமாட்டாய் என்னை
ஏற்றுக்கொள்ளும் நிலையில்...

என் சுவாசமான உன்னை
நான் வாழ்த்தி வாழ்வேன்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (4-Jul-18, 8:07 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 554

மேலே