சோளக்காட்டு காதல் கடிதம் 555

என்னுயிரே...

சோளக்காட்டு சோலையிலே
ஓடியாடி வந்தவனை...

சோளக்காட்டு பொம்மைபோல எதிரே
வந்து பயமுறுத்தியவளே...

பயத்தில் நான் கீழேவிழ
தேவதைபோல் கலகலவென சிரித்தவளே...

உன் கரம் கொடுத்து என்னை
நீ தூக்க நினைத்த நிமிடம்...

நேருக்குநேர் சந்தித்து
கொண்டது நம் கண்கள்...

நான் பார்த்த பார்வை...

காதல் பார்வையா
காம பார்வையா தெரியாமலே...

என்னை நான்
இழந்தேன் உன்னிடம்...

இது என் காதல் கடிதம்...

உன்னை நீ இழந்திருந்தால்
சம்மதம் கொடு...

இல்லையேல் சாபம்கொடு...

காதல்
விமோச்சனம் நான் பெற.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (4-Jul-18, 8:34 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 187

மேலே