மக்கள் செயல்

===============
மதுவருந்த தாவிவரும் மந்திதனைக் கிராமத்தார்
=மயங்கவிட்டுப் பிடிப்பதற்கோ மருந்து வைப்பர்.
மெதுவாக ஊர்ந்துவந்து மெய்சிலிர்க்கச் செயும்பாம்பை
=மகுடியினை வைத்தூதி மயக்கிப் பிடிப்பர்
புதுவிதமாய்த் திருடனைத்தும் பிடிப்பதற்கு கண்காணிப்பு
= படக்கருவி வலைவிரித்துப் போட்டு வைப்பர்.
பொதுப்பணிக்காய் ஒதுக்கின்றப் பணம்பதுக்கும் கள்வருக்கோ
=பூமாலை பொன்னாடைப் போர்த்தி வைப்பர்.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (7-Jul-18, 1:34 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 73

மேலே