எனக்குள் காதலை விதைத்தவன் நீ 555

என்னவளே...

மழலை பட்டாளம்
உன்னை பின்தொடர...

ஆரஞ்சு தாவணியில்
உன் முகம் மறைத்து...

என் திசை நோக்கி
நீ வந்தாய்...

என் எதிர்கால
துணைவி யார்...?

எங்கே இருக்கிறாள் சிந்தனையின்
கடற்கரையில் தனிமையில் நான்...

என்னருகே வந்தவள் பரிசு
பொருள் தந்தாய்...

என்னை நீ கடந்து சென்ற சில
நிமிடங்களில் பிரித்து பார்த்தேன்...

உள்ளெ காதலின் சின்னம்
இதயம் அம்புக்குறி தங்கி...

என்னை இதற்க்கு முன்பு நீ
கண்டு இருக்கிறாயா...

நான் உன்னை பார்த்து
இருக்கிறேனா தெரியவில்லை...

என் முகம் மலரும்போது தொலைவில்
உன் முகத்திரையை நீக்கினாய்...

அதிர்ந்தேனடி
அந்த நிமிடம் நான்...

நீ எனக்காக வந்தவளென
உணர்ந்தேன்...

எனக்குள் மலர்ந்தது காதல் மலரா
இல்லை காமமலரா தெரியவில்லை...

இதோ என் உயிர் உனக்காக
சம்மதம் என்றால் என் கரம்பிடி...

இல்லையேல் இந்த
காகிதத்தை தூக்கி எறி...

உன் கைகளால் காதல்
விதை போட்டவள் நீ...

என்னில் காதல்
மலர் மலர்ந்தது...

உன் கைகளால் காதல்
மலரை பறித்துவிடு.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (8-Jul-18, 8:59 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 396

மேலே