கண்ணிர்
கதறி அழ
துடிக்கிறேன்
காரணம் கேட்டால்
என்ன சொல்ல?
அன்று
நிஜத்தில் நேசித்தவனை
இன்று
நினைவுகளில்
சுவாசிக்கிறேன் என்றா.....
அன்று
இன்று என்று
காலம் நேரம் மட்டுமே
மாறி செல்கிறது
ஆனால்
எந்தன் காதல் மட்டும்
இன்றும்
மாறவில்லை என்றா?
என்ன சொல்லி நானும் கதறி அழ?