காதல்
அவள் பார்வையால் தொடுத்த
ஒரே ஒரு அம்பு -என் நெஞ்சில்
தைத்து மலராய் மாறியது
கூடவே கேட்டது ஒரு மந்திரம்
காதல், காதல் ,காதல் என்று
என்னை அவளோடு பிணைத்தது
எங்கிருந்தோ வந்த சோலைக்குயில்
கீதம் மங்கள கீதமாய் ஒலித்திட