பவுன்பவுனாய் நெல்மணி பார்

ஆற்றங் கரையருகின் நெல்வயலில் பாடுபட்டாள்
தூற்றினாள் நெல்களத் தில்

பாடுபட்டாள் நெல்வயலில் வேர்வையைச் சிந்தியே
ஈடுண்டோ இப்பணிக்கு சொல்

கதிரடித்தாள் கையோங்கி நெற்களத்தில் பாட்டி
பவுன்பவுனாய் நெல்மணி பார்

பெருவையார் கதிரடிக்கும் பெண் வெண்பாவில்
சொன்ன கருத்துக் குறட்பா இங்கே உங்களுக்காக

எழுதியவர் : கவின் சாரலன் (11-Jul-18, 7:37 am)
பார்வை : 116

மேலே