இதற்கு பெயர்தான் காதலா

இந்த உலகம் காதலுக்காக
அளித்த அங்கிகார சான்றுகள்
யாவும் குறைவுதானடி.
காதலுக்கு முடிசூட்டி அழகுபார்த்து
ரசித்தவர் எவருண்டோ
இப்பூலகில்- அதனை
சூறையாடி குருதியில் குளித்து
ஆனந்த தாண்டவமாடும்
மனிதர்தான் உளரே!

இவர்களுக்குப் பயந்து
மாண்டுபோவதென்பது
கோழைத்தனமடி!
காமம் நம்மை ஆக்ரமித்து நம்
காதலை அழித்திடும் என
எதிர்பார்க்கின்றரோ?
உன் கூந்தலில் பூச்சூடி
நெற்றியில் பொட்டிட்டு
கழுத்தில் தாலிகட்டி
காலில் மெட்டியிட்ட பின்னர்தானடி
என்னுள் காமம் தழைத்திடும்
இது உன்மேல் உறுதியடி!

இதில் நமக்கான வாழ்க்கை
அதனை நாம்தான்
வாழவேண்டும் அதில்
வளர்ச்சி பெறவேண்டும்!
அன்பு செல்வம் வளமை
மகிழ்ச்சி நிம்மதி
இவைகளுக்காகத்தான்
யாவரும் தினமும்
போராடிக்கொண்டிருக்கின்றனர்
இவையாவும் உனக்கு
நிச்சயம் கிட்டுமடி!

இப்புவியில் யாவரும்
ஒருவரை ஒருவர் சார்ந்து
வாழ்கிறார்கள் - இதில்
நான் உன்னைச் சார்ந்தும்
நீ என்னைச் சார்ந்தும்
வாழ ஆசைப்படுகிறோம்
இதற்கு பெயர்தான்
காதல் என்கிறார்கள்!

எழுதியவர் : பெ.பரிதி காமராஜ் (11-Jul-18, 3:08 pm)
பார்வை : 284

மேலே