எறிந்துவிடுங்கள் என்னை...

தரித்திர பூமியின்
சரித்திரப் பக்கங்களில்
இடம்பெற நான்
விரும்பவில்லை...

என்னை ஒரு
புத்தகத்திற்குள் பூட்டி
பூலோகத்திற்கு
வெளியே மனிதர்களின்
மகா பூதக்கண்ணாடிகளுக்கு
புலப்படாத தூரம்
எறிந்துவிடுங்கள்...
ஏதேனும் ஒரு
நச்சத்திரத்திலோ
எரிகல்லிலோ
மோதி
படிந்துவிடுகிறேன்
நான்...
~☆~

எழுதியவர் : முத்தரசு மகாலிங்கம் (12-Jul-18, 11:44 am)
சேர்த்தது : முத்தரசு
பார்வை : 68

மேலே