சுந்தர ராமசாமி சிறுகதைகள் முழுத்தொகுப்பு

சுந்தர ராமசாமியின் படைப்பு ஆளுமையின் முக்கியமான பல கூறுகளை அவரது சிறுகதைகளிலேயே தெளிவாக அடையாளம் காணமுடிகிறது. சு.ரா.வின் சிறுகதைகள் வாசிப்பை ஒர் இனிய அணுபவமாக்கும் அதே நேரத்தில் தீவிரமான அனுபவத்தின் தொந்தரவுக்கும் நம்மை உள்ளாக்குகின்றன. செறிவும் நேர்த்தியும் கொண்ட மொழியோடு உறவு கொள்ளும் சுகத்தை அளிக்கும் போதே உக்கிரமான தேடலின் கனத்தையும் நம் மீது சரியச் செய்து விடுகினறன. மனிததுக்கதையும் அவலங்களையும் மட்டுமன்றி நெகிழ்வையும் விகாசத்தையும் பதிவு செய்கின்றன. வாழ்வுக்கும் நமக்குமு், காலத்திற்கம நமக்கும், மெழிக்கும் நமக்குமு் இடையேயான உறவுகளைச் செழுமைப்படுத்துவது ஒரு கலைஞனின் முக்கியமான பங்களிப்பாக இருக்க முடியும். சுந்தர ராமசாமியின் சிறுகதைகள் இதைப் பெருமளவில் நிறைவாகச் செய்திருக்கின்றன.

எழுதியவர் : (13-Jul-18, 10:11 pm)
பார்வை : 44

சிறந்த கட்டுரைகள்

மேலே