என் விழிகளை பார்த்து நில்லடி 555

என்னவளே...

உன்னை கண்ட நாள் முதல் எனக்குள்
ஓர் புது சந்தோசம்...

உன்னிடம் என்னை நான்
அறிமுகம் படுத்திக்கொண்டேன்...

உன்னிடம் நான்
சாதாரணமாக பேசி சிரித்தாலும்...

எனக்குள் இருக்கும் சந்தோசம்
வந்து வந்து செல்கிறது...

உன்னிடம்
சொல்ல நினைத்து...

என்னில் மறைத்துக்கொண்ட
நாட்கள் அதிகம்...

என் காதலை உன்னிடம்
சொல்லும் வேலை...

என் விழிகளை
பார்த்தபடி...

என் கரங்களை கோர்த்து நில்லடி
எப்போதும்போல்...

உன் பதில் எதுவாக இருந்தாலும்
என் காதலுக்கு.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (14-Jul-18, 3:10 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 721

மேலே