காக்கத்தானே

நேர்மையாய் வாழ
நல்லவழி சொல்லித்தர
மதங்கள் தோன்றின
மக்களும் மாறினர் என்றாலும்
வெவ்வேறு மதங்கள்
வேறுபட்ட தெய்வங்கள்

அன்புதான் இறைவன்
இறைவன் ஒருவனே
அவனின்றி ஓர் அணுவும்
அசையாது
ஆதவன் போல இறைவனும்
அனைத்துக்கும் ஒருவனே

இயலாத தன் குட்டியை
இடமாற்றம் செய்ய—பூனை
தன் வாயால் கவ்வி
தூக்கி சென்று
பொறுப்புடன் குட்டிகளை
பாதுகாப்பது ஒரு முறை

தாயின் வயிற்றை
தன் இரு கைகளால்
குரங்குக்குட்டி பற்றிக்
கொண்டு தாயோடு செல்லும்
தாய்க்கு சிரமம் தராமல்
தன்னைக் காப்பது மற்றொரு முறை

குரல் எழுப்பும்
கோழியின் பின்னால்
குஞ்சுகள் பின் தொடரும்
ஒன்றை ஒன்று சார்ந்திருக்கும்
தன் குஞ்சுகளைக் காக்க சேய்க்கும்
தாய்க்கும் சமபங்குண்டு
இது மூன்றாவது முறை

விலங்குகளின் பொறுப்புகள்
வேறுபடுவதுபோல்
மானிட பக்தியிலும்
மாற்றங்கள் இருந்தாலும்
இறைவன் ஒருவனே!
அவனிடம் வேண்டுவது
சந்ததியைக் காக்கத்தானே!

எழுதியவர் : கோ. கணபதி. (15-Jul-18, 8:10 am)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 36

மேலே