அங்கே என் மனம்
மின்னியல் ஒளியும் மின்னணு மொழியும் இல்லா ஓர் கருநீல இரவு ..
பெய்ந்திடுமோ பொய்த்திடுமோ
என குழப்பிடும் மழைமேகம் ..
ஆளில்லா துணிவில், கச்சேரி
அரங்கேற்றும் காட்டாற்று வெள்ளம்..
மேற்கே தூறிய சாரலை என்மேல்
வீசி சிரிக்கும் தென்றல் காற்று..
பாவாடை தாவணிக்குள் பருவமுற்ற
மங்கையாய்,மேகம் போர்த்தும் நிலா
எங்கோ ஓர் மலையடிவாரத்தை துளைக்கும்
பொக்லைனின் சப்தம் கேட்காமல் நான் ..
$ வினோ....