நாடி உன்னை நாடி பெண்ணே

நாடி வந்தேனடி
உந்தன் விழிகளை நாடி
உந்தன் காந்த கருவிழிகளில்
என்னைப் புகுத்தி
உன் மனதை சென்றடைய
அங்கு நீ என் நாடியைக்கண்டிடலாமே
பெண்ணே அது சொல்லும் உன்னை
நாடி நாடி என்மனம்
பிதாய்த் திரிகிரிதே என்று
இதை அறியாமல் இன்னும்
நீ என்னை நாடாது போயின்
எந்தன் நாடி நின்றுபோய்விடுமே பெண்ணே
பின்னர் நீ நாடின் என்பயன் கொல்
நீயே சொல்வாயடி பெண்ணே
இப்படிக்கு உன்னை நாடி நான்
உந்தன் ரசிகன் உன்னை எந்தன்
காதலியாய் அடையவிரும்பும்
நல்லவன், வல்லவன் வாலிபன் நான்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (16-Jul-18, 9:17 am)
பார்வை : 50

மேலே