அஞானி,ஞானி,பரமஞானி,காதலும்,காதலரும்

நேற்றிலேயே இருந்து
வாழ்க்கையை வீணாக்குபவன்
அஞானி

நேற்றை மறந்து
இன்று இனிதே வாழ்ந்து
நாளையை இன்றே நினைப்பவன்
ஞானி

எப்போதோ நடக்கப்போவதை
இன்றே கண்டு
கண்டதையெல்லாம் தெளிவாய்
படம் பிடித்துவைத்ததுபோல்
கூறிச்சென்றவர்கள்
ஞானியர்க்கும் ஞானிகள்
காலத்தையும் வென்றவர்கள்

உண்மைக் காதலர்கள்
வாழமுடியாமல் அழைக்கப்பட்டாலும்
அவர்கள் காதல் அழிவதேயில்லை
அந்த காதலில் இவர்கள் நித்ய வாசம்
காதல் காலத்தை வென்றதென்றால்
அதில் வாழும் காதலரும்தானே !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (16-Jul-18, 10:35 am)
பார்வை : 55

மேலே