வாழ்வில் விட்டுக்கொடுத்தல்வளைதல் வேண்டும்

வளைத்தால்தான் வில்லுக்கு
நாணேத்த முடியும் அம்பெய்த
அதுபோல் வாழ்க்கையிலும் நாம்
சற்று வளைந்திட வேண்டும்
விறைப்பாய் எப்போதும் இருந்தால்
வாழ்வும் விறைத்துவிடும்
காதலன், காதலி
கணவன், மனைவி
இவர்கள் தமக்குள் கொஞ்சம்
விட்டுக்கொடுத்து வாழ்ந்தால்
உண்டு நன்மையே, இல்லை எனில்
வாழ்வில் விரிசல் காணும்
விறைப்பாய் வளர்ந்திடும்
நெற்கதிர்கள் முதிர்ந்தபின்
வளைந்திட நெல்லாய் அறுவடையாகுதே
இது இயற்கை நமக்கு காட்டிடும் பாடம்
கோடுகள் வளைந்தாள் அல்லவோ கோணங்கள் ,கோலங்கள்
கோணங்கள் இல்லை எனில் கலைகள் இல்லையே
வெறும் நேர்கோடுகள் இருப்பின் பயன் இல்லையே

வாழ்க்கையில் விட்டுக்கொடுத்தல் வேண்டும்
வாழ்க்கையில் சற்று வளைந்து கொடுத்தல் வேண்டும்
அரசியலிலும் ஆட்சி சிறக்க இரு கட்சியினரும்
ஒருவருக்கொருவர் நாட்டின் நலன் கருதி
வளைந்துகொடுத்தல் வேண்டும்
நாணேத்தும் முன் வளையும் வில்லுப்போல.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (17-Jul-18, 6:24 am)
பார்வை : 104

மேலே