ஆயுள் கைதி
அவன் ஆயுள் கைதி
அன்று அவன் மனைவி
மூன்று வயது அவன்
பிள்ளையுடன் சிறையில்
அவனைப் பார்க்க வந்தாள்
அவள் அவனைப் பார்த்தாள்
அவள் கண்கள் கடலானது
அவன் செய்த குற்றம்
நண்பனையே கொலை செய்தது
ஏனய்யா செய்தாய் இப்படியோர்
குற்றம் என்று கூட கேட்க பயந்தவள்
அவன் மனைவி; நாளையை எண்ணி
அவள் கண்களில் நீர் கடலாய்...........
அவன் கல்லாய் நின்றான்
அப்போது அவன் குழந்தை
பச்சிளம் குழந்தை அது
அவனைப்பார்த்து சிரித்தது......
பின் ஓவென்று அழுதது...
எங்கிருந்தோ சமட்டியில்
தலையில் அடித்ததுபோல் உணர்ந்தான்
இப்போது அவன் சிந்தனையும்
வேலை செய்தது ............எண்ணினான்
ஐயோ என் பிள்ளையே என்று
அலறி குழந்தையை கைகளில் அள்ளி
உச்சி மோர்ந்தான் ...கதறினான்
ஐயோ பிறக்கையில் உன்னைப்போல்தானே
இருந்தேன் நானும் .......எப்படி கொலைகாரனானேன்
கொலைகாரனாக நான் பிறக்கவில்லையே
பின் இது எப்படி.......வளர்ப்பில் குறையா ........
யாரைக் குற்றம் சாட .............யாரும் இல்லையே
அவனுக்கென்று.............
மனைவியிடம் கூறினான்.....
என்னை மன்னித்துவிடு .........என் குற்றம்
இப்போது உணர்ந்துவிட்டேன் என்
பிள்ளையின் சிரிப்பில், அழுகையில்
ஒருபோதும் அவனை நான்
என்னைப்போல் l ஆகவிடமாட்டேன்
நீயும் நானும் அவனை நல்லவனாய்
வல்லவனாய் ஆளாக்கிடவேண்டும்
நல்நடத்தையில் விரைவில் நான்
விரைவில் வெளி வந்திட முயல்வேன்
அதுவரை அவனை நீ தானடி
நல்லவனாய்ப் பேணி வளர்த்திடவேண்டும்
என்று கைப்பிடித்து கூறினான்
அவன் முகத்தில் இப்போது கொலைக்குற்றவாளி
என்ற தோற்றம் மாறியது .............
பிறப்பில் யாரும் குற்றாளியல்ல
;வளர்ப்பில் குறை குற்றவாளியாக்கிறதே
,