உன் பார்வை

உன் பார்வை பட்டவுடன்
என் விழி மூடி
மூழ்கியது
ஆழ்ந்த உன் நினைவுகளில்

உறக்கம் வர மறுத்தது
நடுநிசி வரை
அதி காலை தூக்கமும்
கலைந்து போனது

உன் வருகைக்காக
இரவு முழுதும் விழித்து

அதி காலையில்
பூத்து குலுங்கிய
மலர்கள் எல்லாம்
மெல்ல சுருங்கி போனது

உன் பார்வை படாததால்

திரும்ப உன் வருகையின்
போது உன் மேல் உதிர்ந்து
மோட்சம் அடைகிறது
நீ உன் கூந்தலில் சூடி கொள்ளாததல்

எழுதியவர் : senthilprabhu (17-Jul-18, 10:52 pm)
சேர்த்தது : ப செந்தில்பிரபு
Tanglish : un parvai
பார்வை : 552

மேலே