அவளொரு புத்தகம்

பெண்ணே உன் அழகை ஓர்
புத்தகமாய் எண்ணி கற்பனையை
ஓடவிட்டேன் புத்தகத்தின் பக்கங்கள்........
புரட்டிப் பார்க்கலாமா என்று நினைத்து
முதல் பக்கம் புரட்ட அது முகவுரை
எழுதியது அந்த பிரம்மனே......புத்தகத்தை
அத்துடன் மூடிவிட்டேன் மேலும் புரட்டாது
'நீ பேரழகி' என்று மட்டும் புத்தகத்திற்கு
தலைப்பு தந்தேன் , அத்துடன் என்
கற்பனை நின்றுவிட, எதிரே அவள்
புத்தகம் அல்ல, என்னவள், 'பேரழகியாய்
அங்கு நின்றாள் , பிரமன் படைத்த 'பேரழகி'
என் 'அழகு புத்தகம்'.......பாட நினைத்தேன்
எங்கோ படித்த அந்த வரிகள் ..."புத்தம்
புதிய புத்தகமே ....." அதைக்கொஞ்சம் மாற்றி
உன்னைப் புரட்டி பார்க்கும் உந்தன்
காதலன் நான் ....பிரமன் படைத்த பேரழகே'
என்றேன் ............அதற்கவளோ சொன்னது
'போதும் போதும் இந்த பிதற்றல்
நீ காண்பது நான் உந்தன் காதலியே
புத்தகம் ஏதும் இல்லை .......புரட்டிப்பார்க்க
இன்னும் என்ன தயக்கம் என்றாள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (18-Jul-18, 2:15 pm)
பார்வை : 157

மேலே