விழி மேல் விழி வைத்து

உன்னிடம் நிறைய பேச வேண்டும்
என உனக்காக வழி மேல்
விழி வைத்துக் காத்துக்கொண்டிருந்தேன்
இப்போது நீ வந்தவுடன்
வாய் திறக்கவே வழியின்றி
விழி மேல் விழி வைத்து
உன்னை இரசித்துக்கொண்டிருக்கிறேன்....!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (19-Jul-18, 9:13 am)
பார்வை : 476

மேலே