காதல்

என்னவளுக்கு என்மேல் ஏதோ கோபம்
கண்ஜாடையால்,வார்த்தையால் முள்ளாய்
என் மனதை தைத்திட அது தந்த
வலிகள் அத்தனையும் பொறுமையாய் நான்
அனுபவிக்க , முட்கள் மென்மையானதே
கூர்மை இழந்து மெல்ல மெல்ல ரோசாப்பூவின்
மென்மை இப்போது என்னை நெருட
பூவின் அழகோடு மென்மையும் சேர்ந்து
மணமும் வீசிட என்னை இழந்தேன் நான்
அவளிடம் , என்னை அணைத்து மெல்ல
காதில் சொன்னாள்'மன்னிக்கவேண்டுகிறேன் அன்பே
பெண்புத்தி பின் புத்தியே'

முட்கள் தைத்துவிடும் என்று
ரோசாப்பூவை விட்டுவிடுவாரோ
முட்கள் இருந்தாலும் தூதுவளை
அருமருந்தே .................அதுபோல
பெண்ணே உன் கோபத்திலும்
நான் காண முயல்வது உன் நேசத்தையே
என்றேன் அவள் நானா மீண்டும் காதல்
கொடி காட்ட, நான் மகிழவே.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (20-Jul-18, 3:38 pm)
Tanglish : kaadhal
பார்வை : 128

மேலே