இரு விழிப் பார்வை
ஒரு விழி அம்பை
மறு விழி வில்லில் தொடுத்து..
எதும் அறியாது பயந்து
நிற்பவர் மீது விடுத்து..
அலை கடல் அலையாய்
கடற்கரை பரப்பில் தொலைந்து..
அவரது இதயம்
விழித்ததும் எங்கோ மறைந்து..
புது மலராக அன்றப்போதே
சடுமென காதல் விளைந்து..
சுகந்தமாய் வாழ்வில்
இதம்தரும் படிக்கு வளர்ந்து..
வதைத்திட்ட நொடிகள்
மனம்விட்டெங்கோ புலம் பெயர்ந்து..
வைத்திடும் காதலைப் புரிய
தைத்திடும் இதயங்கள் மகிழ
பொய்த்திடும் நரக நொடிகள்
காய்த்திடும் நினைவு மரங்கள்
பாலை வறட்சி தெளிய
காதல் மழையும் பொழியும்
ஆளை விழுங்கும் அன்பால்
நாளும் வாழ்வும் பூத்துக்குலுங்கும்