ஒருமுகக் காதல்
அந்த வானம் கூட
தொடுவானம் ஆகிவிடும்
என்று எனக்கு தெரிகிறது
நிலவைக்கூட தொட்டுவிடுவேன்
என்று தோன்றுகிறது.
சிமிட்டிக் கொண்டே இருக்கும்
அந்த தூரத்து தாரகைகளைக்கூட
ஆனால் பெண்ணே
தினம் தினம் பார்த்தும்
உந்தன் மனதை என்னால்
இன்னும் தொட முடியலையே
எந்தன் பார்வைகூட உன்னைத்
தொடமுடியலையே , உன்னை
நான் பார்வையால் பிடித்துவிடலாம்
என்று நினைக்கிலேயே
உன் நினைவை தொட்டுவிடுமோ
அது என்று நினைத்து நீ ,
தூர தூர போவதேனோ பெண்ணே
எந்நிலவே, உன்னை
தொடுவதெப்போதோ அந்நாள்
கூடும் வரைக் காத்திருப்பேனே.நான் .