வர்ணதேவதை வண்ணத்துப்பூச்சி

வானவில்லின் உறவா நீ ?
வர்ணங்கள் வடிவமைந்த உன்
இறகுகளை கண்டால்
உன்னை விட வேகமாய்
சிறகடிக்கிறது என் கண்கள் .....

எட்டிப்பிடிக்க என் கைகள் வந்தால்
என்னை பாராமல் நீ பறப்பது ஏனோ ?
ஆனால் ,
நீ பூவில் தேனேடுக்கும் போது
பார்த்துக்கொண்டே புன்னகையில்
தித்திக்குது என் இதழ்கள் ....

அழகின் உருவம் நீயே !!!
வர்ணதேவதையும் நீயே !!!!

எழுதியவர் : Deepikasukkiriappan (22-Jul-18, 8:10 pm)
பார்வை : 196

மேலே