வண்ண உதடு திறக்காமல்

என் மனக்காட்டில்
கூவும் குயில் அவள்
சில நேரம் மட்டுமே
என்னிடம் பேசுவாள்
அதுவும் வாய் திறக்காமலும்
வண்ண உதடு திறக்காமலும்
மணம் வீசும் இமை திறந்து
மலர்ந்து விரிந்த பார்வையால்
என் மேல் படர்ந்து
காதலெனும் மொழியால்....!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (23-Jul-18, 11:24 am)
பார்வை : 93

மேலே