கவிஞன்

சொக்க தங்கத்தில்
அழகிய நகைகள்
செய்வது இயலாது
அதில் தாமிரமும்
கலந்து உருக்கியபின்
அசத்திடும் விதவித
நகைகள் உருவாகும்
அதுபோல்தான் அழகிய
கவிதைக்கு சிறிது
மெய்யுடன் சேர்ந்த
பொய்யான வரிகள்
எப்படி ஆரணங்கு அவளை
மயில் என்றும் கமலமென்றும்
பெண்ணவள் கண்களை கயலென்றும்
கண்ணை கண்ணென்றே எழுத
இவன் எதற்கு கவிஞன்?

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (26-Jul-18, 10:06 am)
Tanglish : kavingan
பார்வை : 55

மேலே