இயற்கையில் அவள் பார்க்கும் அவன்
கடல் நீ
நதி நான்
உன்னோடு சேர்ந்தேன்
காற்று நீ
தென்றல் நான்
உன் அரவணைப்பில் நான்
பரிதி நீ
நிலவு நான்
தீயாய்க் கொதித்தாலும்
குளிராய் நீ தந்த குளிராய்
உன்னை நாடுவேனே
உனைக் குளிரவைக்க
உன்னை அணைத்து
மழை நீ
மண் நான்
நீயன்றி நானில்லையே
நீயும் நானும்
குணத்தில் முரண்பாடு கண்டாலும்
இந்த குணங்களில் ஒன்றுபட்டு
வாழ்கின்றோம்
காதலராய், கணவன், மனைவியாய்
கணவன் நீ
உந்தன் ஆருயிர் மனைவி நான்
நம் பிள்ளைகள்......நான் தாய்.......
என்னவனே உன் நினைப்பென்னவோ
சொல்வாயா நான் மகிழ
இயற்கை இப்படித்தான்
நம்மை வாழவைக்கிறது
============